Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2522 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2522திருவிருத்தம் || 45
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.
நட, Nada - நெஞ்சமே (- (பேதை நெஞ்சமே!) (அப்படிப்பட்ட நமக்கு))
பெருகேழலார், Perugezhalar - (பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹாவராஹரூயானவனர்
இ அகாலம், I Akalam - (ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம், Tham - தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம், Peru Kan Malar Pundareekam - பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல், Nammael - நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார், Orungae Pirazha Vaiththaar - ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர், Nam Pol Varum Kezhbavar - (அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே, Oruthar Ulaare - வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம், Thollai Vazhiyam - (அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
சூழ் பிறப்பு, Sool Pirappu - விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே, Marungae Vara Perume - அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு, Solla - சொல்லாய்;
வாழி, Vaazhi - (கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.