| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2522 | திருவிருத்தம் || 45 | பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல் ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல் வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும் மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே. | நட, Nada - நெஞ்சமே (- (பேதை நெஞ்சமே!) (அப்படிப்பட்ட நமக்கு)) பெருகேழலார், Perugezhalar - (பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹாவராஹரூயானவனர் இ அகாலம், I Akalam - (ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில் தம், Tham - தம்முடைய பெரு கண் மலர் புண்டரீகம், Peru Kan Malar Pundareekam - பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை நம்மேல், Nammael - நம் பக்கலில் ஒருங்கே பிறழ வைத்தார், Orungae Pirazha Vaiththaar - ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார். நம் போல் வரும் கேழ்பவர், Nam Pol Varum Kezhbavar - (அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர். ஒருவர் உளரே, Oruthar Ulaare - வேறொருத்தர் உண்டோ? (இல்லை) தொல்லை வாழியம், Thollai Vazhiyam - (அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்; சூழ் பிறப்பு, Sool Pirappu - விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள் மருங்கே வர பெறுமே, Marungae Vara Perume - அருகிலும் வரக்கூடுமோ? சொல்லு, Solla - சொல்லாய்; வாழி, Vaazhi - (கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக. |