| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2523 | திருவிருத்தம் || 46 | மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி, விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன் தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த் திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே. | மடம் நெஞ்சம் என்றும், Madham Nenjam Endrum - பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும் (- (ஏனெனில்)) தமது என்றும், Thamathu Endrum - நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும் ஓர் கருமம் கருதி, Oru Karumam Karuthi - ஒரு காரியத்தை யுத்தேசித்து நெஞ்சைவிட உற்றார், Nenjaivida Utrar - மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர் விடவோ அமையும், Vidavo Amayum - அத்துணிவை விட்டொழிதல் தகுதி; அ பொன் பெயரோன், A Pon Peyron - அந்த (கொடிய) இரணியனுடைய தட நெஞ்சம், Tada Nenjam - பெரிய மார்பை கீண்ட, Keenda - எளிதிற் பிளந்தருளி பிரானார் தமது, Piranar Thamadu - பராக்ரமசாலியான எமபெருமானுடைய அடிக்கீழ், Adikizh - திருவடிகளிலே விட, Vida - (யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது) போய், Poi - விரைவாகச் சென்று திடம் நெஞ்சம் ஆய், Thidam Nenjam Aay - உறுதியான கருத்துள்ளதாய் எம்மை நீத்து, Emmai Neethu - (தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு இன்று தாறும், Indru Tharum - இன்றுவரையில் திரிகின்றது, Thirigindrathu - (அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது. |