| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2525 | திருவிருத்தம் || 48 | மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச் சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே, | மெல இயல், Mela Iyalku - மென்மையான தன்மையையுடைய (- (அறியமாட்டாது; அதுபோல)) ஆக்கை, Aakkai - உடம்பை யுடைத்தான கிருமி, Kirumi - புழுவானது குருவில், Kuruvil - புண்ணிலே மிளிர்ந் தந்து, Milirn Thandhu - வெளிப்பட்டு அதுவே, Adhuve - அவ்விடத்திலேயே செல்லிய, Selliya - நடமாடும்படியான செலதைத்து, Selathaitthu - ஸ்வபாவத்தையுடையது; (அது) உலகை என காணும், Ulagai En Kaanum - உலக நடத்தையை எங்ஙனம் அறியும்? என்னாலும், Ennalum - என்னைக்கொண்டும். தன்னைச் சொல்லிய, Thannaich Solliya - தன்னைப் பாடுவித்த சூழல், Sozhai - சூழ்ச்சியையுடைய திருமாலவன், Thirumalavan - ச்ரிய பதியான அப்பெருமானுடைய கவி, Kavi - புகழுரையை யாது கற்றேன், Yadhu Kattren - (யான்) யாதென்று அறிவேன்? பல்லியன் சொல்லும், Palliyan Sollum - பல்லியின் வார்த்தையையும் சொல் ஆ கொள்வதோ, Sol A Kolvathoo - (பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ பண்டு பண்டே உண்டு, Pandhu Pandhe Undu - மிக வெகு காலமாகவுள்ளது |