| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2526 | திருவிருத்தம் || 49 | பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல் கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே. | காள வண்ணம், Kaala Vannam - கறுத்த திருநிறத்தையும் வண்டு உண் துழாய், Vandu Un Thuzhai - வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய பெருமான், Perumaan - ஸர்வேச்வரனும் மதுசூதனன் தாமோதரன், Madhusoodhanan Thamodharan - மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால் உண்டும், Undum - (பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும் உமிழ்ந்தும், Umizhndhum - (பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும் கடாய, Kaday - பாதுகாக்கப்பெற்ற மண், Man - பூமியினுடைய ஏர், Aer - அழகை அன்ன, Anna - ஒத்த ஒள் நுதலே, Ol Nuthale - ஒளிபொருந்திய நெற்றியையுடையவளே! பண்டும், Pandhum - முன்பும் பலபல, Palapala - மிகப்பலவான வீங்கு இருள், Veengu Irul - பெரிய இருட்பொழுதுகளை காண்டும், Kaandum - பார்த்திருக்கிறோம்; இ பாய் இருள்போல், I Bay Irulpol - இந்தப் பரந்த இருட்பொழுது போல கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம், Kandum Arivadhum Kaetpadhumyam Ilam - யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம். |