திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2527 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2527திருவிருத்தம் || 50
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர் நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய் மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.
பதவுரை Show / Hide
வலவ, Valava - பாகனே! (- (எவ்வித்திற்கு? என்றால்))
ஒன்நுதல், Onnudhal - அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி, Mamai Oli - மேனி நல்நிறத்தின் விளக்கம்
பயவாமை, Payavamai - பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர், Nam Ther - நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும், Virainthu Nannudhal Vendum - துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
தேன் நவின்ற, Then Navinra - வண்டுகள் பாடப்பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி, Vin Mudhal Nayagan Neel Mudi - பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய், Vel Muththam Vaasikaithu Aai - வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண்முதல் சேர்வு|ற்ற, Manmudhal Seruvattr - (முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி, Aruvi - நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும், Seyyaa Nirkum - செய்து நிற்கிற
மா மலைக்கு, Maa Malaikku - பெரிய திருமலைக்கு
இன்று கடாக, Indru Kadaaka - இப்பொழுது (தேரை)நடத்துவாயாக