| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2528 | திருவிருத்தம் || 51 | மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான். அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர் விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத் துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே! | கடல், Kadal - கடலானது மலை, Malai - மந்தரபர்வதத்தை மத்து ஆ கொண்டு, Maththu Aa Kondu - மத்தாகக்கொண்டு அரவால், Aravaal - வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால் சுழற்றிய, Suzhatriya - (தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த மாயம், Maayam - அற்புதசக்தி வாய்ந்த பிரான், Piraan - எம்பெருமான் அலைகண்டு, Alaikandu - (தன்னை) அலைத்து கொண்ட, Konda - (தன்னிடத்தினின்று) எடுத்துக்கொண்ட அமுதம், Amudham - அமிர்தத்தை கொள்ளாது, Kollaadhu - (மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல், வேரி துழாய் துணை ஆ, Vaeri Thuzhai Thunai Aa - பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு துலைகொண்டு, Thulaikondhu - ஒத்து எதிர்வந்து தாயம் கிளர்ந்து, Thaayam Kilarndhu - பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து, Barathar Vilai Kondo Thandha Sangam Ivai Kolvaan Othu - நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று) விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது. அழைக்கின்றது,, Alaikkindrathu - (சண்டைக்குக்) கூப்பிடுகின்றது. |