| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2529 | திருவிருத்தம் || 52 | அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய் மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய் அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே. | அழைக்கும், Alaikkum - (அன்போடு) அழைக்கிற கருகடல், Karugadal - (தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது. வௌ திரை கை, Vau Thirai Kai - (தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே கொண்டு போய், Kondo Poi - எடுத்துக்கொண்டுபோக, விண்வாய், Vinvaai - ஆகாயத்திலே புலம்பி அழைத்து, Pulambi Azhaitthu - (மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு முலை மலை மேல் நின்றும், Mulai Malai Mael Nindrum - (தனது) ஸ்தனங்களாகிய மலைகளின்மேல் நின்றும். அலர் வாய் மழை கண் மடந்தை, Alar Vaai Mazhai Kan Madanthai - தாமரமைலரில் வாழ்பவளும் மழைபோலக் குளிர்ந்த கண்களையுடையவளுமான திருமகள் அரவு அணை ஏற, Aravu Anai Aera - (அப்பாற் கடலினிடையிற் பள்ளிகொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற, (அது கண்டு) மண் நாதர், Man Naadhar - பூமிப்பிராட்டி ஆறுகள் ஆய், Aarugal Aayi - ஆறுகளாக பெருக விட்ட மழை கண்ண நீர், Mazhai Kanna Neer - மழையாகிய கண்ணீரான்றி திருமால் கொடையான் என்று, Thirumaal Kodaiyaan Endru - திருமால் கொடியவனென்று வெளியிட்டு வார்கின்றது, Vaarkindrathu - பெருகுகிறது. |