| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2530 | திருவிருத்தம் || 53 | வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம், சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த் தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ் வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே. | வாரா ஆயின முலையான, Vaaraa Aayin Mulaiyaan - கச்சுப்பொருந்திய தனத்தையுடையவளான (- (இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;) (கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்)) இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய இது, Idhu - இந்த நோயானது வானோர் கலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய், Vaanor Kalaimagan Aam Seer Aayin Deivam Nalnoy - தேவாதி தேவனான திருமாலினது தகுதியான திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்; தெய்வம், Deivam - திய்வமான தண், Than - குளிர்ந்த அம், Am - அழகிய துழாய் தார் ஆயினும், Thuzhai Thaar Aayinum - (அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும் தழை ஆயினும், Thazhai Aayinum - (அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும் தண் கொம்பு அது ஆயினும், Than Kombu Adhu Aayinum - குளிச்சியான (அதன்) கிளையை யாயினும் கீழ்வேர் ஆயினும், Keelveer Aayinum - கீழிலுள்ள (அதன்) வேரையாயினும் நின்ற மண் ஆயினும், Nindra Man Aayinum - (அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும் |