| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2531 | திருவிருத்தம் || 54 | வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண் டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார் மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே! | நெய், Ney - (திருவாய்ப்பாடியிலே) நெய்யை (- (எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது) பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும்.)) தொடு உண்டு, Thodu Undu - கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து ஏசும்படி, Aesumpadi - (பலரும்) பரிஹஸிக்கும்படி அன்ன செய்யும், Anna Seyyum - (மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய எம் ஈசர், Em Eesar - எமது தலைவரும் விண்ணோர் பிரானார், Vinnor Piranaar - (மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய மாசு இல் மலர் அடி கீழ், Maasu Il Malar Adi Keel - குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ் எம்மை சேர்விக்கும், Emmai Seruvikkum - எம்மை அடைவிக்கவல்ல வண்டுகளே, Vandugalai - ஓ வண்டுகளே! (நீங்கள்) வீசும் சிறகால் பறத்திரி, Veeseum Siragal Parathiri - வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்; விண் நாடும் துங்கட்டு எளிது, Vin Naadum Thungattu Elidhu - (அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது; |