திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2533 | திருவிருத்தம் || 56 | வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே. | பதவுரை Show / Hideவியல், Viyal - விசாலமான இடம், Idam - உலகங்களை உண்ட, Unda - திருவயிற்றில் கொண்டருளிய பிரானார், Piranar - பிரபுவாகிய எம்பெருமான் விடுத்த, Vidutha - (எம்மிடத்துச்) செலுத்திய திரு அருளால், Thiru Arulal - சிறந்த கருணையினால் உயல் இடம்பெற்று, Uyil Idempetru - உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று உய்ந்தம், Uyandham - வாழ்ந்திட்டோம், அஞ்சலம், Anjalam - (இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம் தோழி, Thozhi - வாராய்தோழி! ஓர் தண் தென்றல் வந்து, Or Than Thendral Vandu - ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து அயிலிடை யாரும் அறிந்திலர், Ayilidai Yaarum Arindhilar - அருகில் எவரும் அறியாதபடி அம் பூ துழாயின் இன் தேன், Am Poo Thuzhayin In Then - அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனியதேன்துளிகளை புயலுடை நீர்மையினால், Puyaludai Neermaiyinal - மழைதுளித்தல் போலத் துளிக்குந்தன்மை யுடையதாய் என், En - என்னுடைய புலன், Pulan - அவயவங்களிலும் கலன், Kalan - ஆபரணங்களிலும் தடவிற்று, Thadavitru - ஸ்பர்சித்தது |