Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2534 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2534திருவிருத்தம் || 57
புலக்குண்டலப்  புண்டரீகத்த போர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார் * எம்மை யாருங்கழறலரே
புலம் குண்டலம், Pulam Kundalam - அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த, Pundareekath - தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை, Porkendai - (தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டைமீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு, Valli Ondraal Vilakkundu - (மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று, Ulakingru - (தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக்கொண்டு
வேல் வழிக்கின்றன, Vel Vazhikkinrana - வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன், Kannan - எம்பெருமானுடைய
கையால், Kaiyal - திருக்கைகளால்
மலக்குண்டு, Malakkundu - கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த, Amudham Surandha - (தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல்போன்று, Mari Kadalponru - அலைகிளரப்பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று, Avatraal Kalakkundu Naanru - அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார், Kandaar - (அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும், Yaarum - எவரும்
எம்மை, Emmai - எம்மை
கழறலர், Kazhalalar - (ஒருத்தியின் கண்பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.