| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2534 | திருவிருத்தம் || 57 | புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க்கெண்டை * வல்லியொன்றால் விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன்கையால் மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற் கலக்குண்டநான்று கண்டார் * எம்மை யாருங்கழறலரே | புலம் குண்டலம், Pulam Kundalam - அழகிய குண்டலங்களையுடைய புண்டரீகத்த, Pundareekath - தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள போர்கெண்டை, Porkendai - (தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டைமீன்கள் போன்ற கண்கள் வல்லி ஒன்றால் விலக்குண்டு, Valli Ondraal Vilakkundu - (மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு உலாகின்று, Ulakingru - (தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக்கொண்டு வேல் வழிக்கின்றன, Vel Vazhikkinrana - வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன. கண்ணன், Kannan - எம்பெருமானுடைய கையால், Kaiyal - திருக்கைகளால் மலக்குண்டு, Malakkundu - கடைந்து கலக்கப்பட்டு அமுதம் சுரந்த, Amudham Surandha - (தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின மறி கடல்போன்று, Mari Kadalponru - அலைகிளரப்பெற்ற கடல்போல அவற்றால் கலக்குண்ட நான்று, Avatraal Kalakkundu Naanru - அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது கண்டார், Kandaar - (அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள் யாரும், Yaarum - எவரும் எம்மை, Emmai - எம்மை கழறலர், Kazhalalar - (ஒருத்தியின் கண்பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள். |