| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2535 | திருவிருத்தம் || 58 | கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய் நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே? | ஒன்றே, Ondrae - ஒரு திருவடியிடமே ஆயிற்று, Aayitru - பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது; மற்றொரு திருவடி முழுதாயிற்று, Muzhudhaayitru - (பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய் உழறு அலர், Uzhalru Alar - உலகுங்செல்லவல்ல பரந்த ஞானத்து சுடர் ஆய் விளக்காய், Gnanaththu Sudar Aay Vilakkai - ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய் உயர்ந்தோரை இல்ல, Uyarnthorai Illa - (தன்னிலும்) மேற்பட்டவரையுடையவனல்லாதவனும் நிழல் தர, Nizhal Thara - நிழலைச் செய்யும்படி எல்லா விசும்பும், Ella Visumbum - ஆகாசாவகாம் முழுவதிலும் நிறைந்தது, Niraindhathu - வியாபித்தது நீண்ட அண்டத்து, Neenda Andhathu - அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும் அழறு அவர் தாமரைக் கண்ணன், Azharu Avar Thamarai Kannan - சேற்றில் மலர்ந்த செவ்விமாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனுமான திருமால். இங்கு அளக்கின்றது என்னோ, Ingu Alakkindrathu Enno - இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ? |