Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2536 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2536திருவிருத்தம் || 59
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.
வல்வினையேன், Valvinaiyen - கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை, Thala Peru Neel Muruvai Seyyavaya Thadamulai - முல்லையரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல்வரிசையை யுடைய சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களையுடையவளாகிய இப்பெண்பிள்ளை (என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய, Alappu Aru Thanmaiya - “அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி, Oozhi - கற்பங்களினும்
அம், Am - அழகிய (நீண்ட)
கங்குல், Gangul - இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன், Am Thannam Thuzhaykku Ulam Peru Kaadhalin Neeliy Aay Un - அழகிய குளிர்ந்த  திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன், Ongu Munneer Valam Peru Naadan - உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன், Madhusoodhanan - மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும், Ennum - என்று வாய்விட்டுச் சொல்லியலற்றுகிறாள்.