Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2537 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2537திருவிருத்தம் || 60
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
முலையோ, Mulaiyo - ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில், Muzhu Mutrum Ponthil - மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல், Moy Poo Kuzhal - அடர்ந்த மென்மையான தலைமயிர்கள்
குறிய, Kuriya - (முடிகூடாமல்) குட்டையுள்ளன;
கலையோ, Kalaiyo - அடையோ வென்னில்
அரை இல்லை, Arai Illai - இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ, Naavo - நாக்கோவென்னில்
குழறும், Kuzharum - (திருத்தமாக வார்த்தை சொல்லமாட்டாமல்) குதலைச்சொல்  பேசுகின்றது.
கண், Kan - கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என, Kadal Mann Ellam Vilaiyo Ena - கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப்பொருளோவென்று சொல்லும்படி
மிளிரும், Milirum - (ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான்மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்., Perumanmalaiyo Thiruvaengadam Endru Karkindra Vaasagam - ‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள்  பரமே, Ival Parame - (இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.