| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2537 | திருவிருத்தம் || 60 | முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம் விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான் மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே. | முலையோ, Mulaiyo - ஸதனங்களோ வென்னில் முழு முற்றும் போந்தில், Muzhu Mutrum Ponthil - மிக முழுவதும் தோன்றினவில்லை; மொய் பூ குழல், Moy Poo Kuzhal - அடர்ந்த மென்மையான தலைமயிர்கள் குறிய, Kuriya - (முடிகூடாமல்) குட்டையுள்ளன; கலையோ, Kalaiyo - அடையோ வென்னில் அரை இல்லை, Arai Illai - இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை; நாவோ, Naavo - நாக்கோவென்னில் குழறும், Kuzharum - (திருத்தமாக வார்த்தை சொல்லமாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது. கண், Kan - கண்களோ வென்னில் கடல் மண் எல்லாம் விலையோ என, Kadal Mann Ellam Vilaiyo Ena - கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப்பொருளோவென்று சொல்லும்படி மிளிரும், Milirum - (ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன; பெருமான்மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்., Perumanmalaiyo Thiruvaengadam Endru Karkindra Vaasagam - ‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை இவள் பரமே, Ival Parame - (இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?. |