| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2538 | திருவிருத்தம் || 61 | வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம் நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும் வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால் தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே. | தொல்லை வானவர் தம் நாயகன், Thollai Vaanavar Tham Naayagan - பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும் நாயகர் எல்லாம் தொழுமவன், Naayakar Ellam Thozhumavan - ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும் ஞாலம் முற்றும், Njaalam Mutrum - உலகம் முழுவதையும் வேய் அகம் ஆயினும் சோரா வகை, Veiy Aham Aayinum Soora Vagai - ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி) இரண்டே அடியால் தாயவன், Irande Adiyal Thaayavan - (தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய நம் இதை, Nam Idai - நமது தலைவன் ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று, Aay Kulam Aay Vandhu Thonrirru - இடையர் குலத்தையுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்துவளர்ந்த எளிமையை வாசகம் செய்வது, Vaasagam Seivathu - எடுத்துப்புகழ்ந்து கூறுவது நம்பரமே, Nambaramai - நம்மாலாகக் கடவதோ? (ஆகாது) |