Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2538 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2538திருவிருத்தம் || 61
வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
தொல்லை வானவர் தம் நாயகன், Thollai Vaanavar Tham Naayagan - பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன், Naayakar Ellam Thozhumavan - ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும், Njaalam Mutrum - உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை, Veiy Aham Aayinum Soora Vagai - ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன், Irande Adiyal Thaayavan - (தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம் இதை, Nam Idai - நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று, Aay Kulam Aay Vandhu Thonrirru - இடையர் குலத்தையுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்துவளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது, Vaasagam Seivathu - எடுத்துப்புகழ்ந்து கூறுவது
நம்பரமே, Nambaramai - நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)