Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2539 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2539திருவிருத்தம் || 62
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.
இரக்கினும், Irakkinum - எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் (- (காப்பு அரிது))
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது, Oru Penpaal Enavum Eengu Irai Irangadhu - இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கரு கடல், Karud Kadal - கரியகடலானது
அறையோ என நின்று அதிரும், Araiyoo Ena Nindru Adhirum - (இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ, O - இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல், Aravu Anaimel - சேஷசயனத்தின் மீது
பள்ளிகொண்ட, Pallikonda - சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே, Mugil Vannane - காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு, Eengu - இவ்விடத்தில்
இவள்தன், Ivalthan - இவருளுடைய
நிறையோ, Niraiyo - நினைக்குணமோவென்னில்,
இனி, Ini - இனிமேல்
உன் திருஅருளால், Un Thiruarulaal - உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி, Andri - பாதுகாத்து வைக்க முடியாது;
முறையோ, Murayo - (இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?