திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2540 | திருவிருத்தம் || 63 | வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே. | பதவுரை Show / Hideவண்ணம் சிவந்துள, Vannam Sivanthula - திருநிறம் சிவந்துள்ளவையும் வான் நாடு அமரும் குளிர் வழிய, Vaan Naadu Amarum Kulir Vazhiy - பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையையுடைவையும் தண் மெல் கமலம் தடம்போல் பொலிந்தன, Than Mel Kamalam Thadampol Polinthana - குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம்போல விளங்குகின்றவையுமாகிய இவையோ தம், Ivaiyo Tham - இத்திருக்கண்களோ கண்ணன், Kannan - கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும் திருமால், Thirumaal - திருமகள் கணவனுமான பெருமானுடைய திருமுகம் தன்னொடும், Thirumugam Thannodum - திருமுகமண்டலத்திலே காதல் செய்தேற்கு, Kaadhal Seitherkku - வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய எண்ணம், Ennam - மனத்திலே புகுந்து, Pugunthu - பிரவேசித்து இ காலம், I Kaalam - இப்பொழுதும் அடியேனோடு இருக்கின்ற, Adiyenodu Irukkindra - (விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன. |