Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2540 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2540திருவிருத்தம் || 63
வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே.
வண்ணம் சிவந்துள, Vannam Sivanthula - திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய, Vaan Naadu Amarum Kulir Vazhiy - பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையையுடைவையும்
தண் மெல் கமலம் தடம்போல் பொலிந்தன, Than Mel Kamalam Thadampol Polinthana - குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம்போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம், Ivaiyo Tham - இத்திருக்கண்களோ
கண்ணன், Kannan - கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால், Thirumaal - திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும், Thirumugam Thannodum - திருமுகமண்டலத்திலே
காதல் செய்தேற்கு, Kaadhal Seitherkku - வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம், Ennam - மனத்திலே
புகுந்து, Pugunthu - பிரவேசித்து
இ காலம், I Kaalam - இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற, Adiyenodu Irukkindra - (விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.