Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2541 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2541திருவிருத்தம் || 64
இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.
நிலம் தேவா, Nilam Devaa - பூமிதேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால், Irukku Aar Mozhiyal - வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை, Neri Izhakkamaai - முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர், Ulaku Alandha Thiruthal Thunai Vananghuvar - உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும், Yaamum - நாமும்
அவா ஒருக்கா, Ava Orukka - (எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து, Vinaiyodum Emmodum Nondhu - (அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக்கொண்டு
கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள்போல, Kani Inmaiyin Karukkai Nadippavargalpol - பழம்  கிடைக்காமையாற் பிஞ்சைத்தின்பவர் போல
திருநாமம் சொ£ல் கற்றனம், Thirunamam Sol Kattranam - (பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.