| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2541 | திருவிருத்தம் || 64 | இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே. | நிலம் தேவா, Nilam Devaa - பூமிதேவர்களாகிய பிராமணர்கள் இருக்கு ஆர் மொழியால், Irukku Aar Mozhiyal - வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு நெறி இழக்காமை, Neri Izhakkamaai - முறைமை தவறாமல் உலகு அளந்த திருதால் துணை வணங்குவர், Ulaku Alandha Thiruthal Thunai Vananghuvar - உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்: யாமும், Yaamum - நாமும் அவா ஒருக்கா, Ava Orukka - (எமது) ஆசையை அடக்க மாட்டாமல் வினையொடும் எம்மொடும் நொந்து, Vinaiyodum Emmodum Nondhu - (அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக்கொண்டு கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள்போல, Kani Inmaiyin Karukkai Nadippavargalpol - பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத்தின்பவர் போல திருநாமம் சொ£ல் கற்றனம், Thirunamam Sol Kattranam - (பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம். |