Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2543 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2543திருவிருத்தம் || 66
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.
எரி, Eri - அக்நியும் (- (எம்பெமான் தனது எம்பெருமானுடைய))
நீர், Neer - ஜலமும்
வளி, Vali - வாயுவும்
வான், Vaan - ஆகாசமும்
மண், Man - பூமியும்
ஆகிய, Aagiya - என்னும் பஞ்சபூதங்களின் வடிவமான
காலிகள், Kaaligal - செங்கழுநீர்ப்பூக்காளனவை
உண்ணாது, Unnaathu - உண்ணாமலும்
உறங்காது, Urangaatu - தூங்காமலும்
உணர்வு உறும், Unarvu Urum - (எப்பொழுதும் த்யாகரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான், Vaikundham Annan - ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய், Kan Aay - கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின, Aru Vinaiyen Uyir Aayin - தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர்நிலையான
எத்தனை யோகியர்க்கும், Ethanai Yogiyarkkum - மிக்க யோகநிலையையுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய், En Aayi - (அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத்தக்கவையாய்
மிளிரும், Milirum - பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம், Iyalthin Aam - தன்மையையுடையவையாம்.