| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2545 | திருவிருத்தம் || 68 | மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ் நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய் கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே. | பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலைமோதுகிற கடலால் சூழப்பட்ட நிலம், Nilam - பூலோகத்தை தாவிய, Thaaviya - அளந்தருளின எம்பெருமான் தனது, Emperumaan Thanathu - எம்பெருமானுடைய வைகுந்தம், Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை அன்னாய், Annai - ஒத்துவிளங்குகிறவளே! கலந்தார் வரவு எதிர்கொண்டு, Kalandhaar Varavu Edhirkondu - (உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து வல் கொன்றைகள், Val Konraigal - வலிய கொன்றை மரங்கள் கார்த்தனை, Kaarthanai - கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர) மாலையும், Maalaiyum - மாலைகளையும் மாலை பொன் வாசிகையும், Maalai Pon Vaasikayum - பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும் புலம் தோய் தழைபந்தர், Pulam Thoi Thazhaipandhar - மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே தண்டு, Thandu - கொம்புகளிலே உற, Ura - நெருங்க நாற்றி, Naatri - தொங்கவிட்டுக்கொண்டு மலர்ந்தே ஒழிந்தில, Malarndhe Ozhindhila - முற்றும் மலர்ந்து விட்டனவில்லை |