| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2548 | திருவிருத்தம் || 71 | ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும் தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே. | ஊழிகள் ஆய், Oozhigal Aay - காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே) உலகு ஏழும் உண்டான், Ulaku Ezhum Undaan - உலகமுழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன் என்றிலம், Endrilam - என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) குறினோமில்லை. களா பழம் கண்டு, Kala Pazham Kandu - களாப்பழத்தைப் பார்த்து பழம் வண்ணம் ஆழி என்றேற்கு, Pazham Vannam Aazhi Endraerku - ‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று (குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு அஃதே கொண்டு, Ahdhe Kondu - அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு அன்னை, Annai - (எனது) தாய் இவளோ நாழ் என்னும், Ivaloo Naazh Ennum - ‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்; ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும், Gyaanam Undaan Vannam Sol Vitrru Ennum - உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு இது என்று குற்றங் கூறுவன்; தோழிகளோ, Thozhigaloo - தோழிகளே! எம்மை அம்மனை சூழ்கின்ற, Emmai Ammnai Soozhkindra - எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு உரையீர், Uraiyeer - நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள் |