Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2549 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2549திருவிருத்தம் || 72
சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே.
சூழ்கின்ற, Soozhkindra - (இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல், Gangul - ராத்ரியினுடைய
சுருங்கா இருளின், Surunga Irulin - சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை, Karuthinimbai - கறுத்த செறிவை
போழ்கின்ற, Pozhkingira - விளக்கிற
அம்பிள்ளை திங்களும், Ampillai Thingkalum - அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க, Pozhga - (என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து, Thuzhai Malarkke Thazhkingira Nenchatthu - (நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன், Oru Thamiyadadi Yen - ஒரு துணையும்மில்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு, Mamaikku - (இயல்பான) மேனிநிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு, Indru Vazhkingira Aaru - (இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று, Valiyathu Vandu Thonrirtru - சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ, Iduvo - இப்படியோ?