| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2549 | திருவிருத்தம் || 72 | சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை, போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று வாழ்கின்ற வாறிது வோவந்து தோன்றிறு வாலியதே. | சூழ்கின்ற, Soozhkindra - (இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற கங்குல், Gangul - ராத்ரியினுடைய சுருங்கா இருளின், Surunga Irulin - சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய கரு திணிம்பை, Karuthinimbai - கறுத்த செறிவை போழ்கின்ற, Pozhkingira - விளக்கிற அம்பிள்ளை திங்களும், Ampillai Thingkalum - அழகிய இளஞ் சந்திரனும் போழ்க, Pozhga - (என்னையும்) பிளக்கட்டும்; துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து, Thuzhai Malarkke Thazhkingira Nenchatthu - (நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய ஒரு தமியாடடி யேன், Oru Thamiyadadi Yen - ஒரு துணையும்மில்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய மாமைக்கு, Mamaikku - (இயல்பான) மேனிநிறத்துக்கு இன்று வாழ் கின்ற ஆறு, Indru Vazhkingira Aaru - (இப்பொழுது வாழ்க்கை நேரும்படி வாலியது வந்து தோன்றிற்று, Valiyathu Vandu Thonrirtru - சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது இதுவோ, Iduvo - இப்படியோ? |