திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2550 | திருவிருத்தம் || 73 | வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே. | பதவுரை Show / Hideவிண், Vin - ஆகாயத்தில் நின்று (- (வென் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய)) வால் வெள் நிலவு, Vaal Vel Nilavu - மிகவும் வெளுத்த நிலாவாகிய பால், Paal - பாலை உலகு ஆர சுரக்கும், Ulaku Aara Surakkum - உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற சுரவி, Suravi - பசுவினது சுர, Sura - சுரம்பு முதிர், Mudir - மிகப்பெற்ற மாலை, Maalai - மாலைப்பொழுதிலே தமியாட்டி தளர்ந்தது, Thamiyatti Thalarnthathu - (நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்ததன்மை பரிதிவட்டம் போலும், Paridivattam Polum - இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய அடல் அழி, Adal Azhi - வலிய சக்கராயுதமுடைய பிரான், Piraan - அத்தலைவன் ஏழ்பொழில், Ezhalpozhil - ஏழுவகைப்பட்ட லோகங்களையும் அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம், Alikkum Salpin Thamaikai Kol Aam - ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா? |