| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2551 | திருவிருத்தம் || 74 | தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண் வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக் கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய் அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே. | தளர்ந்தும் முறிந்தும் வருதிரை, Thalarndhum Murindhum Varuthirai - (கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் பாயல், Payal - (ஆதிசேஷனாகிய) சயனத்தில் திருநெடு கண் வளர்ந்தும், Thirunedu Kan Valarnthum - அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும் அறிவுற்றும், Arivutrum - (அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும் வையம் விழுங்கியும், Vaiyam Vizhungiyum - பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான், Malvaraiyai Kilarndhu Marithara Theendu Eduththan - கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது முடிசூடு துழாய், Mudichoodu Thuzhai - திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை அளைந்து உன், Alaindhu Un - அளாவியுண்ட பசு சிறு தென்றல், Pasu Siru Thendral - புதிய இளமையான தென்றற் காற்றானது அந்தோ வந்து உலாகின்றது, Andho Vandhu Ulaakindrathu - மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது. |