| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2553 | திருவிருத்தம் || 76 | இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய், வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின் தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. | இடம்போய் விரிந்து, Idampoi Virinthu - எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து இ உலகு அளந்தான், I Ulagu Alandhaan - இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய எழில் ஆர், Ezhil Aar - அழகு நிறைந்த தண், Than - குளிர்ந்த துழாய்போது வடம், Thuzhaipothu Vadham - திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு இனையும், Inaiyum - வருந்துகிற மட நெஞ்சமே, Mada Nenjamai - பேதைமையுடைய மனமே! வியல் தாமரையின் தடபோது, Viyal Thaamaraik Kadhapothu - சிறந்த பெரிய தாமரைமலர் ஒடுங்க, Odunga - குவிய மேல் ஆம்பல், Mel Aambal - புல்லிய ஆம்பலை அலர்விக்கும், Alarvikkum - அலரச் செய்கிற வெள் திங்கள், Vel Thingal - வெள்ளிய சந்திரன் நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது, Nangal Velvanaykke Vadham Pol Virithal Ithu - நமது வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது வியப்பே, Viyappe - ஓர் ஆச்சரியமோ? |