| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2554 | திருவிருத்தம் || 77 | திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே. | திங்கள், Thingal - பிறைச் சந்திரனாகிய அம்பிள்ளை, Ambillai - அழகிய தனது இளம்பிள்ளை புலம்ப, Pulamba - (தந்தையை இழந்து) தனிப்பட செங்கோல் தன் அரசுபட்ட, Chengol Than Arasupatta - சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான செம் களம், Chem Kalam - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை பற்றி, Patri - அடைந்து நின்று, Ninru - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று என்கு, Enku - வருந்துகிற புல்மாலை, Pulmalai - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால் தென்பால் இலங்கை, Thenpal Ilangai - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை வெம் களம்செய்த, Vem Kalamseitha - கொடிய போர்க்களமாகச் செய்த நம் விண்ணோர் பிரானார், Nam Vinnor Piranar - நமது வோதி தேவனான தலைவனது துழாய், Thuzhai - திருத்துழாயை துணை ஆ, Thunai Aa - தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு நங்ககளை மாமை கொள்வான், Nangagalai Mamaik Kolvvan - நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு வந்து தோன்றி நலிகின்றது, Vandhu Thondri Nalikinrathu - எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது |