| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2555 | திருவிருத்தம் || 78 | நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த வலியும் பெரு மையும் யாஞ்¦ சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல் பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே. | நலியும்நரகனை வீட்டிற்றும், Naliyumnarakkanai Veetirum - (உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும் (- (எமது நாயகனார்)) வாணன் திண்தோள் துணிந்த வலியும், Vaanan Thinthol Thunindha Valiyum - பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும் பெருமையும், Perumaiyum - (அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல, Yaam Sollum Neerthu Alla - (எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல; மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார், Mai Varaipol Poliyum Uruvin Piraanaar - அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது புனை பூதுழாய் மலர்க்கே, Punar Poodhuzhai Malarkke - சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே மெலியும், Meliyum - ஆசைப்பட்டு வருந்துகிற மட நெஞ்சினார், Mada Nenjinaar - (எமது) பேதைநெஞ்சு தந்து போயின, Thandu Poyina - (தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை வேதனை, Vedhanai - இத் துன்பங்கள். |