Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2556 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2556திருவிருத்தம் || 79
வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.
வேதனை, Vedhanai - வேதம் வல்லவனும்
வெள் புரி நூதனை, Vel Puri Noodhanai - சுத்தமான யஜ்னோபவித முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை, Vinnor Parava Nindra Saadhanai - மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை, Gnaanalam Vizhungum Anaadhanai - (பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை, Gnaalam Thathum Paadhanai - உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல், Paal Kadal Paambu Anaimeel - திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும், Palli Konda Arulum - யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே, Seethanaiye - குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார், Thozhuvaar - இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர், Vin Ulaarilum Seeriyar - பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.