| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2557 | திருவிருத்தம் || 80 | சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த, பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த பேரர சேஎம் விசும்பர சேஎம்மை நீத்துவஞ்சித்த ஓரர சேஅரு ளாய்,இரு ளாய்வந் துறு கின்றதே. | சீர் அரசு ஆண்டு, Seer Arasu Aandu - சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி தன் செங்கோல் சில நான் செலீ இ, Than Chengol Sila Naan Seleei I - தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி கழிந்த, Kazhintha - பின்பு இறந்தொழிந்த பார் அரசு, Paar Arasu - ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை ஒத்து, Ottu - போன்று ஞாயிறு, Nyaayiru - ஸூர்யன் மறைந்து, Maraindhu - அஸ்தமித்தான்; பார் அளந்த, Paar Alandha - உளகத்தை அளந்து கொண்ட பேர் அரசே, Peer Arase - சிறந்த தலைவனே! எம் விசும்பு அரசே, Em Visumbu Arase - பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே! எம்மை நீத்து வஞ்சித்த, Emmai Neethu Vanchiththa - எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த ஓர் அரசே, Oor Arase - ஒப்பற்ற நாதனே! அருளாய், Arulai - (இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்) இருள் ஆய் வந்து கூறுகின்றது, Irul Aay Vandhu Koorrugindrathu - இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது. |