| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2558 | திருவிருத்தம் || 81 | உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப் பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த் துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே! | ஓர்ப்பு இலர் ஆண், Oorppu Ilar Aan - (இவளுக்கு நேர்ந்துள்ள கோயில் தன்மையையும் அதன் காரணத்தையும் அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய் கூறுகின்ற, Koorrugindr - (இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற கன்மங்கள், Kanmakal - (வெறியாட்டு முதலிய) காரியங்கள் மேலன, Melan - மேன்மேலும் உண்டாகாகின்றன; இவளை பெறுகின்ற தாயர், Ivazhai Perugindra Thaayar - இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார். மெய் நொந்து பெறார் கொல், Mei Nonthu Peraar Kol - உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ? குழல்வாய், Kuzhalvaai - (இவளது) கூந்தலிலே துழாய், Thuzhai - (எம்பெருமானது) திருத்துழாயை கூறுகின்றிலர், Koorrugindrilar - சூட்டுகின்றாரில்லை; தொல்லை வேங்கடம், Thollai Vengadam - பழமையான திருவேங்கட மலையிலே ஆட்டவும், Aattavum - இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் சூழ்கின்றிலர், Sozhgindrilar - ஆலோசிக்கின்றாரில்லை; இவள் ஆகம், Ival Aagam - இவளது உடம்பு மெல் ஆவி எரி கொள்ள, Mel Aavi Eri Kollu - மென்மையான உயிரை விரஹித்தீக் கவர்ந்துகொள்ளும்படி இறுகின்றது, Irugindrathu - முடிகறிவளவாகா நின்றது. |