| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2560 | திருவிருத்தம் || 83 | விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை, முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர் கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே. | விளரி, Vilarai - விளரியென்னும் இசையையுடைய (- (இவ்வாற்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)) குரல், Kural - குரலையுடைய அன்றில், Anril - அன்றிற்பறவை மெல் பெடை, Mel Pedai - மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான மூன்றில் பெண்ணை முளரி குரம்பை, Moondril Pennai Mulari Kurambai - முன்வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு மெல் அவியும், Mel Aviyum - (இவளது) மெலிவடைந்த உயிரும் நையும், Naiyum - (உடம்பின் ) இளைப்பும் எல்லாம், Ellam - என்னும் இவையாவும் இது இது ஆக, Idhu Idhu Aaga - இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க, முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும், Mugilvannan Peer Kilari Kilari Pithatrum - காயமேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை (வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான தளரின் கொலோ, Thalarin Koloo - முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ இ தையலுக்கு, I Thayalukku - இம்மகளுக்கு உய்யல் ஆவது, Uyyaal Aavathu - (அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது? அறியேன், Ariyyeen - அறிகிறேனில்லை. |