| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2562 | திருவிருத்தம் || 85 | மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி, ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே! | உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை அளந்து கொண்ட (- (மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று)) மாணிக்கமே, Manikkame - மாணிக்கம்போலச் சிறந்தவனே என் மரகதமே, En Maragathame - மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே! மற்று ஒப்பாரை இல்லா, Mattru Oppaarai Illaa - தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத ஆணிபொன்னே, Aaniponne - மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே! மாணிக்கம் கொண்டு குரங்கு, Maanikkam Kondo Kurangu - எறிவு ஒத்த துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும், Thunipon Anna Sudar Irulodu Muttapadum - மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற மாலை, Maalai - மாலைப்பொழுதிலே அடியேன் அடி ஆவி அடக்கலாமே, Adiyen Adi Aavi Adakkalaame - இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர் உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது. |