Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2562 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2562திருவிருத்தம் || 85
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!
உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை அளந்து கொண்ட (- (மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று))
மாணிக்கமே, Manikkame - மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே, En Maragathame - மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா, Mattru Oppaarai Illaa - தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிபொன்னே, Aaniponne - மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு, Maanikkam Kondo Kurangu - எறிவு ஒத்த
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும், Thunipon Anna Sudar Irulodu Muttapadum - மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலாமே, Adiyen Adi Aavi Adakkalaame - இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர் உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.