| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2566 | திருவிருத்தம் || 89 | தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை, பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால் தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே? | தீ வினைக்கு அரு நஞ்சை, Thi Vinaikku Aru Nanjai - (அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும். நல் வினைக்கு இன் அமுதத்தினை, Nal Vinaikku In Amudaththinai - (அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும் பூவின் மேவிய தேவி மணாளனே, Poovin Meviya Devi Manalane - தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும். புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை, Punmai En Kadhu Aavinai Meyakkumval Aayanai - சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும் அன்று, Andru - முன்பொரு காலத்திலே உலகு, Ulaku - உலகங்களை இர் அடியால், Ir Adiyal - இரண்டு அடியாலே தாவின ஏற்றை, Thavina Etrai - அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான எம்மானை, Emmanai - எம்பெருமானை எஞ்ஞான்று தலைப்பெய்வன், Ennanru Talaippeyvan - எப்பொழுதும் சேர்வேன்? |