Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2566 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2566திருவிருத்தம் || 89
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?
தீ வினைக்கு அரு நஞ்சை, Thi Vinaikku Aru Nanjai - (அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை, Nal Vinaikku In Amudaththinai - (அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்
பூவின் மேவிய தேவி மணாளனே, Poovin Meviya Devi Manalane - தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை, Punmai En Kadhu Aavinai Meyakkumval Aayanai - சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்திலே
உலகு, Ulaku - உலகங்களை
இர் அடியால், Ir Adiyal - இரண்டு அடியாலே
தாவின ஏற்றை, Thavina Etrai - அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை, Emmanai - எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன், Ennanru Talaippeyvan - எப்பொழுதும் சேர்வேன்?