| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2567 | திருவிருத்தம் || 90 | தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால், நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம் தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே. | அசுரர் குழாம், Asurar Kuzam - அசுரர் கூட்டத்துக்கு தொலைபெய்த, Tolaipeyta - அழிவைப் பண்ணின நேமி, Nemi - சக்கராயுதத்தை யுடைய எந்தாய், Entay - எம்பெருமானே! யான், Yan - நான் தலைப்பெய்து, Talaippeytu - (யான் உன்னைச்) சேர்ந்து நிலைப்பு எய்த, Nilaippu Eyta - நிலைப்பெற்றிருக்கும்படியாக ஆக்கைக்கு, Akkaikku - இவ்வுடம்பைப்பெறுதற்கு நோற்ற, Norra - தவஞ்செய்த இ மாயமும், I Mayamum - இந்த ஆச்சர்யத்தையும் உன் திரு அடி, Un Tiru Ati - உனது திருவடித் தாமரை மலர்களை குடும், Kutum - (எனது) தலைமேற் கொள்ளும்படியான தகைமையினால், Takaimaiyinal - அடிமைக்குணமாகிய தகுதியினால் மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும், Mayam Cevve Nilaippu Eytilata Nilaimaiyum - இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலைநின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும் காண்தோறு, Kantoru - நோக்குபோதெல்லாம் தொல்லை ஊழி சுருங்கலது, Tollai Uli Surunkalatu - பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை) |