Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2568 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2568திருவிருத்தம் || 91
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
சுருக்கு உறி வெண்ணெய், Surukku Uri Venney - சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட, Totu Unda - வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை, Kalvanai - கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும், Vaiyam Murrum - உலக முழுவதையும்
இரு குறள் ஆகி, Iru Kural Aagi - மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய, Isaiya - (அவன்தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி, Or Moo Adi Vendi - ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட, Orungu Uru Unda - ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெருவபிற்றாளனை, Peruvapirtraalanai - பெரிய திருவயிற்றையுடையவனும்
மாவலி மாட்டு, Maavali Maatu - மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற, Sendra - எழுந்தருளின
பெரு சிறியானை அல்லால், Peru Siriyanaai Allaal - மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது, Adiyen Nenjam Peanadhu - (அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.