திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2568 | திருவிருத்தம் || 91 | சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே | பதவுரை Show / Hideசுருக்கு உறி வெண்ணெய், Surukku Uri Venney - சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை தொடு உண்ட, Totu Unda - வஞ்சனையால் எடுத்து அமுது செய்த கள்வனை, Kalvanai - கள்ளத்தனமுடையவனும் வையம் முற்றும், Vaiyam Murrum - உலக முழுவதையும் இரு குறள் ஆகி, Iru Kural Aagi - மிக்க வாமனவடிவ முடையனாகி இசைய, Isaiya - (அவன்தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி ஓர் மூ அடி வேண்டி, Or Moo Adi Vendi - ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு ஒருங்கு உறு உண்ட, Orungu Uru Unda - ஒருசேர விடாமல் உட்கொண்ட பெருவபிற்றாளனை, Peruvapirtraalanai - பெரிய திருவயிற்றையுடையவனும் மாவலி மாட்டு, Maavali Maatu - மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில் சென்ற, Sendra - எழுந்தருளின பெரு சிறியானை அல்லால், Peru Siriyanaai Allaal - மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை) அடியேன் நெஞ்சம் பேணாது, Adiyen Nenjam Peanadhu - (அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது. |