திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2569 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2569திருவிருத்தம் || 92
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய், நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர் தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.
பதவுரை Show / Hide
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்களுடைய (- (பேண்  நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத))
முந்நீர பெரு பதி வாய், Munnira Peru Pathi Vaai - கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர், Neel Nagar - பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய், Neel Eri Vaiththarulai - பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும்
என்று, Endru - என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை, Ninnai - உன்னை
விண்ணோர், Vinnor - தேவர்கள்
வைகல், Vaikal - நாள்தோறும்
மாலையும் காலையும், Maalaiyum Kaalaiyum - இரண்டு சக்திகளிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர், Thaan Nilam Thoayndhu Thozhuvar - தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்; (அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி)
நின் மூர்த்தி, Nin Moorthi - உனது வடிவத்தின்
பல் கூற்றில், Pal Kootril - பல  அம்சங்களுள்
ஒன்று, Onru - ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே, Kaanalum Aam Kol Endrae - பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)