| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2569 | திருவிருத்தம் || 92 | பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி வாய், நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர் தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே. | அரக்கர், Arakkar - ராக்ஷஸர்களுடைய (- (பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத)) முந்நீர பெரு பதி வாய், Munnira Peru Pathi Vaai - கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள நீள் நகர், Neel Nagar - பெரிய லங்காபுரியில் நீள் எரி வைத்தருளாய், Neel Eri Vaiththarulai - பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும் என்று, Endru - என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்னை, Ninnai - உன்னை விண்ணோர், Vinnor - தேவர்கள் வைகல், Vaikal - நாள்தோறும் மாலையும் காலையும், Maalaiyum Kaalaiyum - இரண்டு சக்திகளிலும் தான் நிலம் தோய்ந்து தொழுவர், Thaan Nilam Thoayndhu Thozhuvar - தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்; (அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி) நின் மூர்த்தி, Nin Moorthi - உனது வடிவத்தின் பல் கூற்றில், Pal Kootril - பல அம்சங்களுள் ஒன்று, Onru - ஒன்றையேனும் காணலும் ஆம் கொல் என்றே, Kaanalum Aam Kol Endrae - பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.) |