| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2570 | திருவிருத்தம் || 93 | காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர் மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும் காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே. | காலை, Kaalae - உதய காலத்தில் வெய்யோற்கு முன், Veyyoorku Mun - ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில் ஒட்டுக் கொடுத்த, Ottuk Koduththa - நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த கங்குல குறும்பர், Gangula Kurumbar - இருளாகிய சிற்றரசர்கள் மாலை, Maalai - ஸாயங்காலத்திலே வெய்யோன், Veyyon - அந்த ஸூர்யனாகிய பேரரசன் பட, Pada - அழிய வையகம் பாவுவர், Vaiyagam Paavuvaar - (தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்; அன்ன கண்டும், Anna Kandu - அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும். காலை, Kaalae - காலத்திற்கு ஏற்றபடி நல் ஞானம் துறை படிந்து ஆடி, Nal Gyaanam Thurai Padinthu Aadi - நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் அழ்ந்து ஈடுபட்டு) கண்போது செய்து, Kanbodu Seidhu - பக்தி பாரவசயத்தாலே கண்களை மூடிக்கொண்டு மாலை, Maalai - எம்பெருமானை நல் நாவில் கொள்ளார், Nal Naavil Kollaar - (தங்களுடைய) நல்ல நாவினால் பெயர்கூறித் துதியார்; அவன் மைபடி, Avan Maipadi - அவனது கரிய திருமேனியை நினையார், Ninaiyaar - நினைப்பதற்கு செய்யார். |