Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2571 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2571திருவிருத்தம் || 94
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
மை படி மேனியும், Mai Padi Meeniyum - நீலநிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும், Sem Thaamarai Kannum - செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையு முடைய
உன், Un - உனது
திரு அடி, Thiru Adi - திருவடித்தாமரை மலர்களை
வைத்திகரே, Vaiththikare - வைதிகர்கள்தாமே
மேய் படியால், Mei Padiyaal - உண்மையான நெறியால்
சூடும், Soodum - தம் தலைமேற்கொண் வணங்கும்படியான
தகைமையினார், Thagaimainaar - தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி, Eppadi Oor A Milakka Kurudu A Milaiyum Ennum Appadi - எப்படி  (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த (கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் கருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன், Yaanum Sonnen - யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன், Adiyen Mattu Yaathu Enban - அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?