| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2571 | திருவிருத்தம் || 94 | மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே, மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார், எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும் அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே? | மை படி மேனியும், Mai Padi Meeniyum - நீலநிறம் செறிந்த திருமேனியையும் செம் தாமரை கண்ணும், Sem Thaamarai Kannum - செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையு முடைய உன், Un - உனது திரு அடி, Thiru Adi - திருவடித்தாமரை மலர்களை வைத்திகரே, Vaiththikare - வைதிகர்கள்தாமே மேய் படியால், Mei Padiyaal - உண்மையான நெறியால் சூடும், Soodum - தம் தலைமேற்கொண் வணங்கும்படியான தகைமையினார், Thagaimainaar - தன்மையுடையவர்கள்; எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி, Eppadi Oor A Milakka Kurudu A Milaiyum Ennum Appadi - எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த (கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் கருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலம்) சொல்லுமோ, அப்படியே யானும் சொன்னேன், Yaanum Sonnen - யானும் உன்னைத் துதித்தேன். அடியேன் மற்று யாது என்பன், Adiyen Mattu Yaathu Enban - அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்? |