| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2572 | திருவிருத்தம் || 95 | யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால் யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும் மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே. | உயிர், Uyir - உயிரானது (- (அங்கு அவ்வுடம்பில்)) முன்னமே, Munname - நெடுநாளாகவே மூது ஆவியில், Moothu Aaviil - பழமையான (பலவகைப்) பிறப்புகளுள் யாது ஆனும் ஓர் ஆக்கையில், Yaathu Aanum Oor Aakkaiyil - யாதாயினும் ஒரு சரீரத்தில் புக்கு, Pukku - பிரவேசித்து ஆம்புண்டும், Aampundum - கட்டுப்பட்டு நின்றும் ஆப்பு அவிந்தும், Aappu Avindum - (அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும், Thadumaarum - நிலைமாறி அலையும் தன்மையுடையது ; அதனால், Adhanaal - ஆதலால் யாது ஆனும் பற்றி, Yaathu Aanum Patri - எந்த விதத்தினாலாவது நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும், Neengum Virathathai Nal Veedu Seyyum - (எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான மாதாவினை, Maadhavinai - தாய் போன்றவனும் பிதுவை, Pithuvai - தந்தை போன்றவனுமான திருமாலை, Thirumaalai - ஸ்ரீமந்நாராயணனை வணங்குவேன், Vananguvein - கரணமடைந்திருப்பேன். |