Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2575 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2575திருவிருத்தம் || 98
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.
துஞ்சா முனிவரும், Thunjaa Munivarum - கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும் (- (இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்))
அல்லாதவரும், Allaadavarum - தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று, Thodara Nindru - பின்பற்றி வழிபடநிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான், Enjaa Piravi Idar Kadivaan - (அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத, Than Saarvu Ilaadha - தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன், Thaniperum Moorthi Than - ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ªணேய் ஊண் என்னும் ஈனம் சொல், Vennaeney Oon Ennum Eenam Sol - வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழிசொல்லுக்கு இடமான
மாயம், Maayam - ஆச்சரியம்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது, Sevvae Nenjaal Ninaippu Aridhu - நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.