| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2576 | திருவிருத்தம் || 99 | ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும் ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர் வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும் ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே | ஈனம் சொல் ஆயினும் ஆக, Eenam Sol Aayinum Aaga - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.; எறி திரை வையம் முற்றம், Eri Thirai Vaiyam Muttram - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும் எனத்து உரு ஆய் கிடந்த, Enathu Uru Aay Kidandha - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த பிரான், Piraan - தலைவனும் இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும், Iru Karppagam Seer Vaanaththavarkkum - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும் அல்லாதவர்க்கும், Allaadavarkkum - அவர்களலல்லாத மனிதர்கட்கும் மற்றுஎல்லாயவர்க்கும், Mattru Ellaiyavarkkum - மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும் ஞானம், Gyaanam - அறிவைக் கொடுக்கிற பிரானை அல்லால், Piranai Allal - தலைவனுமாகிய எம்பெருமானையன்றி நான் கண்ட நல்லது இல்லை., Naan Kanda Nallathu Illai - நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை. |