| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2577 | திருவிருத்தம் || 100 | நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம் பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே | நல்லார், Nallar - நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள் நவில், Navil - புகழ்ந்து கூறப்பெற்ற குருகூர் நகரான், Kurugur Nagarayan - திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும். திருமால், Thirumaal - லக்ஷ்மீபதியான எம்பெருமானது திருபேர், Thiruper - திருநாமங்களை நல்லார், Nallar - பயின்றவரான அடியார்களுடைய அடி, Adi - திருவடிகளாகிற கண்ணி, Kanni - பூமாலையை சூடிய, Soodiya - தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான மாறன், Maran - நம்மாழ்வார் விண்ணப்பம் செய்த, Vinnappam Seitha - (பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த சொல் ஆர் தொடையல், Sol Ar Thodaiyal - சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான இ நூறும், I Noorum - இந்த நூறு பாசுரங்களையும் வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள் பிறப்பு ஆம், Pirappu Aam - ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய பொல்லா அருவினை, Pollaa Aruvinai - கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற மாயம் வல் சேறு அள்ளல், Maayam Val Seeru Allal - கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய பொய் நிலத்து, Poi Nilaththu - பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில் அழுந்தார், Azhundhaar - அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.) |