Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2675 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2675திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1
என் மனனே, En manane - எனது மனமே!
உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர், Uyar - உயர்ந்த
நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ
மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும்
அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ.
அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத
அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ
அவன், Avan - அந்த எம்பெருமானது
துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை
தொழுது, Thozhudhu - வணங்கி
எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை.