Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2676 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2676திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.) 2
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2
மனனகம், Mananakam - மனத்திலே யிருக்கிற
மலம் அற, Malam ara - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)
மலர், Malar - மலர்ந்ததாகி
மிசை எழ தரும், Misai ezha tharum - மேலே மேலே விருத்தி யடைகிற
மனன் உணர்வு, Manan unarvu - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்
அளவிலன், Alavilan - அளவிடப்படாதவனும்
பொறி உணர்வு, Pori unarvu - (மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்
இனன், Inan - இப்படிப்பட்டவனும்
முழு உணர் நலம், Muzhu unar nalam - பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்
எதிர் நிகழ் கழிவினும், Edhir nigazh kazhivinum - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்
இனன் இலன், Inan ilan - ஒப்பு இல்லாதவனும்
மிகுநரை இலன், Migunarai ilan - மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன்
என் நன் உயிர், En nan uyir - எனக்கு நல்ல ஆத்மா.