| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2678 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி - அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் – அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார்.) 4 | நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4 | நாம், Naam - நாம் முதலான தன்மைப் பொருள்களும் அவன் இவன் உவன், Avan ivan uvan - அவன் இவன் உவன் என்கிற ஆண் பால் சுட்டுப் பொருள்களும் அவள் இவள் உவள், Aval ival uval - அவள் இவள் உவள் என்னும் பெண் பால் சுட்டுப் பொருள்களும் எவள், Eval - எவள் என்கிற பெண் பால் வினாப் பொருளும் தாம், Thaam - தாம் என்னும் பன்மைப் பொதுப் பொருளும் அவர் இவர் உவர், Avar Ivar Uvar - அவர் இவர் உவர் என்னும் பலர் பால் சுட்டுப் பொருள்களும் அது இது உது, Athu idhu udhu - அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும் எது, Edhu - எது என்னும் ஒன்றன் பால் வினாப் பொருளும் வீம் அவை, Veem avai - நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும் இவை உவை அவை, Ivai uvai avai - இவை உவை அவை என்னும் பலவின் பால் சுட்டுப் பொருள்களும் நலம் அவை, Nalam avai - நல்ல வஸ்துக்களும் தீங்கு அவை, Theenghu avai - கெட்ட வஸ்துக்களும் ஆம் அவை, Aam avai - எதிர் காலப் பொருள்களும் ஆய அவை, Aaya avai - இறந்த காலப் பொருள்களும் ஆய் நின்ற, Aay nindra - ஆகி நின்ற எல்லாப் பொருள்களும் அவரே, Avare - அந்த ஊர்வேச்வரனேயாம் |