Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2679 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2679திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது.) 5
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5
அவர் அவர், Avar avar - அந்தந்த அதிகாரிகள்
தம தமது, Tham thamadhu - தங்கள் தங்களுடைய
அறிவு, Arivu - ஞானத்தாலே
அறி, Ari - அறியப் படுகிற
வகை வகை, Vagai vagai - பல பல படிகளாலே
அவரவர், Avar avar - அந்தந்த தெய்வங்களை
இறையவர் என, Iraiyavar ena - ஸ்வாமிகளென்றெண்ணி
அடி அடைவர் தன், Adi adaivar than - ஆச்ரயிப்பர்கள்;
அவரவர் இறையவர், Avar avar iraiyavar - அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள்
குறைவு இலர், Kuraivu ilar - அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்)
இறையவர், Iraiyavar - ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்
அவரவர், Avaravar - அந்தந்த அதிகாரிகள்
விதி வழி, Vidhi vazhi - தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக
அடைய, Adaiya - பலன் பெறும்படியாக
நின்றனர், Nindranar - அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.)