திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2681 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2681திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி -அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார்.) 7
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும் உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7
பதவுரை Show / Hide
திடம், Thidam - உறுதியான
விசும்பு, Visumbu - ஆகாசமென்ன
எரி, Eri - அக்நியென்ன
வளி, Vali - வாயுவென்ன
நீர், Neer - ஜலமென்ன
நிலம், Nilam - பூமியென்ன
அவை அவை தொறும், Avai avai thorum - அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும்
உடல் மிசை உயிர் என், Udal misai uyir en - சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல
கரந்து, Karandhu - மறைந்து
எங்கும் பரந்து, Engum parandhu - உள்ளிலும் வெளியிலும் வியாபித்து
இவைமிசை, Ivai misai - ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் ஆய், Padar porul muzhuvadhum aay - படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி)
சுடர்மிகு சுருதியுள் உளன், Sudarmigu suruthiyul ulan - தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான்
இவை உண்ட சுரன், Ivai unda suran - (ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான்.