| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2681 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி -அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார்.) 7 | திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும் உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7 | திடம், Thidam - உறுதியான விசும்பு, Visumbu - ஆகாசமென்ன எரி, Eri - அக்நியென்ன வளி, Vali - வாயுவென்ன நீர், Neer - ஜலமென்ன நிலம், Nilam - பூமியென்ன அவை அவை தொறும், Avai avai thorum - அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும் உடல் மிசை உயிர் என், Udal misai uyir en - சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல கரந்து, Karandhu - மறைந்து எங்கும் பரந்து, Engum parandhu - உள்ளிலும் வெளியிலும் வியாபித்து இவைமிசை, Ivai misai - ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு படர் பொருள் முழுவதும் ஆய், Padar porul muzhuvadhum aay - படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி) சுடர்மிகு சுருதியுள் உளன், Sudarmigu suruthiyul ulan - தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான் இவை உண்ட சுரன், Ivai unda suran - (ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான். |