Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2682 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2682திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஒன்பதினாயிரப்படி -இப் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்.) 8
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8
சுரர் அறிவு அரு நிலை, Surar arivu aru nilai - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்
விண் முதல் முழுவதும், Vin mudhal muzhuvadhum - மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும்
வரன் முதல் ஆய், Varan mudhal aay - சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்)
அவை முழுது உண்ட, Avai muzhudhu unda - அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள
பரபரன், Paraparan - பரம் புருஷன்
அரன் என, Aran ena - ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி
ஒரு மூன்று புரம் எரித்து, Oru moondru puram erithu - இணை யில்லாத திரி புரங்களை எரித்தும்
உலகு அழித்து, Ulagu azhithu - உலகங்களை அழித்தல் செய்தும்
அயன் என, Ayan ena - நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று
அமரர்க்கு, Amararku - தேவர்களுக்கு
அறிவு இயந்தும், Arivu iyandhum - ஞானத்தைக் கொடுத்தும்
அலகு அமைத்து, Alagu amaithu - உலகங்களைப் படைத்தல் செய்தும்
உளன், Ulan - அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்