| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2682 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஒன்பதினாயிரப்படி -இப் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்.) 8 | சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8 | சுரர் அறிவு அரு நிலை, Surar arivu aru nilai - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான் விண் முதல் முழுவதும், Vin mudhal muzhuvadhum - மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும் வரன் முதல் ஆய், Varan mudhal aay - சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்) அவை முழுது உண்ட, Avai muzhudhu unda - அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள பரபரன், Paraparan - பரம் புருஷன் அரன் என, Aran ena - ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி ஒரு மூன்று புரம் எரித்து, Oru moondru puram erithu - இணை யில்லாத திரி புரங்களை எரித்தும் உலகு அழித்து, Ulagu azhithu - உலகங்களை அழித்தல் செய்தும் அயன் என, Ayan ena - நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று அமரர்க்கு, Amararku - தேவர்களுக்கு அறிவு இயந்தும், Arivu iyandhum - ஞானத்தைக் கொடுத்தும் அலகு அமைத்து, Alagu amaithu - உலகங்களைப் படைத்தல் செய்தும் உளன், Ulan - அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன் |