| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2683 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் .) 9 | உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என விவை குணமுடைமையில் உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9 | உளன் எனில், Ulan enil - ஈச்வரனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப் போலே) சொன்னாலும் உளன் அலன் எனில், Ulan alan enil - ஈச்வரனில்லை யென்று (நாஸ்திகர்களின் படியே) சொன்னாலும் உளன், Ulan - ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்; அவன் உருவம் அவன் அருவம், Avan uruvam avan aruvam - அப் பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்; இரு தகைமையோடு, Iru thagaimaiyodu - இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு) உளன் என இலன் என், Ulan ena ilan en - உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப் படுகிற இவை குணம் உடைமையின், Ivai gunam udaimaiyin - அஸ்தித்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாக வுடையனாகுந் தன்மையினாலே இவ்வுருவுகள் இவ்வருவுகள், Ivvuruvugal ivvaruvugal - உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயு மிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும் ஒழிவு இலன் பரந்து உளன், Ozhivu ilan parandhu ulan - எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன் |