Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2684 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2684திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) ((பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.) 10
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10
பரந்த, Parandha - எங்கும் வியாபித்த
தண் பரவையுள், Than paravaiyul - குளிர்ந்த கடலினுள்
நீர் தொறும், Neer thorum - ஜல பரமாணு தோறும்
பரந்த அண்டம், Parandha andam - விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே
இது என பரத்து உளன், Idu ena parathu ulan - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)
நிலம், Nilam - பூமியிலும்
விசும்பு, Visumbu - மேலுலகங்களிலும்
ஒழிவு அற, Ozhivu ara - ஒன்றொழியாமே
கரந்த சில் இடம் தொறும், Karandha sil idam thorum - அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும்
இடம், Idam - அவ் வவ் விடஙக்ளிலே
திகழ், Thigazh - விளங்கா நின்ற
பொருள் தொறும், Porul thorum - ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து, Karandhu - (வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து
எங்கும் பரந்து உளன், Engum parandhu ulan - எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;)
இவை உண்ட கரன், Ivai unda karan - இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான்.